Saturday, May 21, 2011

எனது 'தென்றலின் வேகம்' கவிதைத் தொகுதி பற்றிய திரு. சூசை எட்வேர்ட் அவர்களின் கருத்து

எனது 'தென்றலின் வேகம்' கவிதைத் தொகுதி பற்றிய
திரு. சூசை எட்வேர்ட் அவர்களின் கருத்து


இப்போது ஏராளமாக கவிதைகள், கவிதை நூல்கள் வெளிவந்த வண்ணமாகவே இருக்கின்றன. என்ன சொல்கிறார்கள் என்று விளங்கிக்கொள்வதே என் சிற்றறிவுக்கு சிரமமாக இருக்கின்றது. மறைபொருளாக, விளங்கிக்கொள்வது சிரமமானதாக எழுதுவதுதான் மேதாவிகளின் அதி மேதாவித்தனம் என்ற மனப்பான்மையோ என்னவோ! ஆனால் தென்றலின் வேகம் கவிதைத் தொகுதியைப் படித்தவுடனேயே பளிச்சென்று புரிந்து விடுகின்றது. தேனாய் இனித்து நெஞ்சில் நிறைந்து விடுகின்றது. கவிஞர் இத்தொகுதியில் மனம் திறந்து பேசியிருக்கிறார். எங்களை மனங்களிக்கச் செய்திருக்கிறார். கவிஞனின் நெஞ்சம் எப்படியிருக்க வேண்டுமோ, கவிஞரின் உள்ளமும் அப்படியே இருக்கிறது. காலங்காலமாக அடக்கி, அமுக்கி வைத்திருக்கும் பெண்களிலிருந்து இப்படியொரு கவிதாயினி தோன்றியிருப்பது ஆச்சரியமே.

இலக்கிய பூங்காவனத்தில் இன்னும் பல மனம் வீசும் அழகுப் பூக்களை தமிழ் உலகு எதிர்பார்க்கிறது. அற்புதம். அருமை. வாழ்த்துக்கள்!!!

No comments:

Post a Comment